16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம் - ''எனக்கு இருக்கும் பிரச்னை..''

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். 

Published On :

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து ஸ்ருதி ஹாசன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, நான் தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறேன். சிறப்பான நேரங்களை அனுபவித்துவருகிறேன். நான் ஒன்றை பற்றி விளக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் சில நாட்களுக்கு முன் உடற்பயிற்சி குறித்தும் எனக்கு பிசிஒஎஸ் எனப்படும் சினைப்பை நோய்குறி இருப்பதாக தெரிவித்திருந்தேன். 

அதற்கு நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ, தீவிர பாதிப்புக்குள்ளாகியிருக்கிறேன் என்றோ பொருளல்ல. 

என்னை சிலர் தொலைபேசி வாயிலாக அழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்களா எனக் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இந்தப் பிரச்னை ஒரு ஆண்டுகளாக இருக்கிறது. உங்களின் அக்கறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.