அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

''இளவரசி...'': 'குந்தவை' திரிஷாவை கலாய்க்கும் 'வந்தியத்தேவன்' கார்த்தி - பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் வெளியான நிலையில், கார்த்தி வந்தியத் தேவனாக திரிஷாவுக்கு பதிலளித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:14 pm IST

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் வெளியான நிலையில், கார்த்தி வந்தியத் தேவனாக திரிஷாவுக்கு பதிலளித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் நாளை(ஜூலை 8) பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் போஸ்டர், வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் போஸ்டர், நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இதனை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு  கார்த்தி வந்தியத்தேவனாக அளித்த பதிலில்,, இளவரசி, நீங்கள் இருக்கும் லைவ் லொகேசனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் அளிக்க வேண்டும்'' என கலாய்த்துள்ளார். 

பொன்னியின் செல்வன் கதைப் படி ஆதித்தகரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வந்தியத்தேவன் முயல்வார். அப்போதும் இருவரும் காதல் வயப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.