'நீ கொடுத்த புன்னகை..' கணவர் இறந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்: கலங்கி நின்ற மீனா

உடல்நலக் குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த நடிகை மீனா, ஜூலை 12ஆம் தேதி தனது திருமண நாளன்று கலங்கி நின்றார்.
கணவர் மரணமடைந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்
கணவர் மரணமடைந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்

உடல்நலக் குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த நடிகை மீனா, ஜூலை 12ஆம் தேதி தனது திருமண நாளன்று கலங்கி நின்றார்.

ஜூன் 28ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் மரணமடைந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி மீனாவின் 13வது திருமண நாள் வந்தது. கணவர் இல்லாத நிலையில், திருமண நாளை எதிர்கொண்ட நடிகை மீனாவுக்கு உறவினர்களும் நண்பர்கள் பலரும் தங்களது ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்தனர்.

கடந்த ஆண்டு தனது திருமண நாளில், திருமண வரவேற்பு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த மீனா, “என் வாழ்வில் வானவில் போல வந்து அழகாக ஓவியம் வரைந்தீர்கள். அதனை ஒன்றாக இணைந்து வண்ணமயமாக்குவோம். நீங்கள் அளித்த புன்னகையை என்றும் அணிந்திருப்பேன். மகிழ்ச்சியான திருமணநாள் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு சில நாள்கள் முன்பிருந்தே ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கல்களையும் பதிவிட்டு, நடிகை மீனாவுக்கும், மகள் நைனிகாவுக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

தென்னிந்திய பிரபல பன்மொழி நடிகையான மீனா, தமிழ் சினிமாவில் நடித்திருப்பதோடு மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல‌ படங்களில் நடித்தவர். இவரை அனைத்து மொழியினரும் தங்களுக்குப் பிடித்த நடிகையாக அங்கீகரித்திருந்தனர்.

2009- ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு உறுப்பு தானம் வழங்குபவர்கள் கிடைக்காததால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வித்யாசாகர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில், மீண்டும் நுரையீரல் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். உயா் சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகா் கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.

கணவர் வித்யாசாகரின் இறுதிச் சடங்கு அனைத்தையும் நடிகை மீனாவே செய்ததும், அவரது அஸ்தியை கையில் ஏந்தி வரும்போது, பெருந்துயரத்துடன், அவரது மனத்தைரியம் வெளிப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் நடிகை மீனா தொடர்ந்து நடித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com