ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

’நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்...’: தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2022, 1:03 pm

DIN

‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமா 10 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் 5 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், ’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அக்குறிப்பில்,  ’ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்... ஒருநாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின் அந்த நாள் வந்துள்ளது..’ எனத் தெரிவித்ததுடன் குடும்பத்தினருக்கும் ‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.