நயன்தாரா என் லிஸ்ட்டில் இல்லை என சமந்தாவிடம் இயக்குநர் கரண் ஜோகர் பதிலளித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
நிகழ்வில் சமந்தா திருமணம் குறித்து பேசியது வைரலானது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகர் என நீங்கள் நினைப்பது யார் ? என சமந்தாவிடம் கரண் ஜோகர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | கத்ரீனா ஃகைப் மற்றும் விக்கி கௌசலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அதற்கு சமந்தா சற்றும் யோசிக்காமல், நயன்தாராவுடன் நான் இப்பொழுது ஒரு படத்தில் நடித்துமுடித்தேன் என்றார். அதற்கு கரண் ஜோகர், அவர் என் பட்டியலில் இல்லை என பதிலளித்திருந்தார்.
இதனையடுத்து கரண் ஜோகர் நயன்தாராவை அவமதித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கரண் ஜோகருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் 75வது படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சமந்தா - நயன்தாரா இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.