நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
/

எனக்கு ஏதாவது நேர்ந்தால் காரணம் இந்த நடிகர் தான் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:26 pm IST

பிரபல நடிகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் தனுஸ்ரீ தத்தா. ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் தெரிவித்திருந்தார். 

அப்போது இது ஹிந்தி திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதாவது நேர்ந்தால் நடிகர் நானா படேகர் தான் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர், அவரது வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களும் தான் காரணம். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் பாலிவுட் மாஃபியா தான் இதற்கும் காரணம். குறிப்பு - எல்லோருக்கும் ஒரே வழக்கறிஞர் தான். 

அவர்களின் படங்களைப் பார்க்காதீர்கள். என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் திரைத்துறையினரையும், பத்திரிகையாளர்களையும் படிக்க வேண்டும். நீதி என்னை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.