777 சார்லி படத்தைப் பார்த்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரக்சித் ஷெட்டி நடித்த 777 சார்லி என்ற கன்னட திரைப்படம்கந்த ஜூன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றவருகிறது. இந்தப் படம் ஒரு மனிதனுக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் இடையேயான பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
இதன் காரணமாக செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கண்களில் கண்ணீருடன் திரையரங்கைவிட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்தது.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று (ஜூன் 13) 777 சார்லி படத்தை பார்த்தார். படம் பார்த்த அவர் தனது மறைந்த வளர்ப்பு நாயின் நினைவு வந்ததாக கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் படம் குறித்து அவர் பேசியதாவது, ''விலங்குகள் குறித்த படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக எந்தப் படமும் இல்லை. அந்த நாய் தன் கண்களில் வழியே உணர்வுகளை கடத்துகிறது. இந்தப் படம் மிகவும் நன்றாக உள்ளது. அனைவரும் பாருங்கள். நாயின் அன்பு உண்மையானது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


