தனது தந்தையில்லாமல் தானில்லை என நடிகர் மகேஷ் பாபு தந்தையர் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபு தற்போது ஐரோப்பாவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அடுத்து இயக்குநர் திரிவிக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ‘ஆர்ஆர்ஆர் ’இயக்குநர் ராஜமௌவுலி இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தந்தையர் தினததை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தந்தை என்பதற்கான அர்தத்தையும் அதற்கான எடுத்துக்காட்டாகவும் இருப்பவர் நீங்கள். நீங்கள் இல்லாமல் நான் இந்த நிலைமையில் இருக்க முடியாது. இனிய தந்தையர் தின வாழ்த்துகள் தந்தையே!
இதையும் படிக்க: மோகன்லாலின் 353வது படத்தின் அறிவிப்பு வெளியானது