மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

''திரௌபதி குடியரசுத் தலைவர்னா, அப்போ பாண்டவர்கள்?'' - இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என கேள்வி எழுப்பிய இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜூன் 2022, 12:46 pm IST

திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என கேள்வி எழுப்பிய இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? முக்கியமாக கௌரவர்கள் யார் ? என்று கேள்வி எழுப்பினார். 

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ட்விட்டர் பதிவு சர்ச்சையாக உருவெடுத்தது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து விளக்கமளித்த ராம் கோபால் வர்மா, இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதே தவிர, உள்நோக்கம் ஏதுமில்லை. மகாபாரதத்தில் திரௌபதி தான் எனக்கு விருப்பமான கதாப்பாத்திரம்.

திரௌபதி என்ற பெயர் அரிதானது. அதனால் அதனை நினைவுபடுத்தும் விதமாக அப்படிக்கூறினேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து மனோஜ் சின்ஹா என்பவர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.