குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அஜித்துடன் இணைந்து நடிக்கும் கவின்

நடிகர் அஜித்துடன் இணைந்து கவின் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

News image
Updated On :1 மார்ச் 2022, 4:43 pm IST

வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் படத்துக்கு தற்காலிகமாக ஏகே 61 எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் துவங்கவிருக்கிறது. 

வலிமை படத்தில் யுவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு பதிலாக ஏகே 61ல் அனிருத் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.  

டாக்டர் படத்தில் இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கவின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட கதை விவாதத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. மேலும் தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை வலிமை முறியடித்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.