நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுவுடன் இணையும் ஷிவானி: ஜோடியாக நடிக்கிறாரா ?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். 

News image
Updated On :2 மார்ச் 2022, 1:05 pm IST

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், வடிவுலுவுடன் படத்துடன் கூடிய என்னைப் பற்றிய மீம்ஸ்கள் வெளியாவதிலிருந்து, தற்போது உண்மையாகவே இணைந்து நடிக்கிறேன். மாபெரும் நடிகரான வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரி்டர்ன்ஸ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், வடிவேலுவின் மகளாக ஷிவானி நடிக்கவிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசைப் பணிக்காக லண்டன் சென்றிருந்தபோது நடிகர் வடிவேலுவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு வடிவேலு குணமானதால் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.