நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விக்ரமில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கும் கமல்? இதுதான் கதையா?

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 மார்ச் 2022, 12:37 pm IST

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபகத் ஃபாசிலின் காட்சி படமாக்கப்படும் விடியோவைப்  பகிர்ந்து விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம்.  அரசியல்வாதிகளான விஜய் சேதுபதி - ஃபகத் ஃபாசிலிடம் சிக்கிக்கொண்ட நரேனை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி விக்ரம் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதே பாணியில் 'பிளைண்ட்' என்ற கொரியன் படத்தைத் தழுவி நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.