
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து நடிக்கவிருக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஒத்திகைக்கான படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி, ஜெய் பீம் படத்தில் வில்லனாக நடித்த தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகர் கருணாஸ் இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரியவிருக்கிறார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா காளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.
இதையும் படிக்க | நினைவு தினம்: விசுவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!
தற்போது நடிகர் சூர்யா, பாலா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படபிப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் வெற்றிமாறனும் தற்போது 'விடுதலை' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.