நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆண் குழந்தைக்கு அம்மாவான ஆல்யா: பெயர் இதுதானாம்: வெளியான புகைப்படம்

ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

News image
Updated On :28 மார்ச் 2022, 12:55 pm IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஆல்யா மானஸா மற்றும்  சஞ்சீவ் கார்த்திக் ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு  ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. 

ஆல்யா ராஜா ராணி 2 தொடரில் சந்தியா என்ற வேடத்திலும் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும் நடித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யா, சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகினார். 

Story image

ஆல்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சஞ்சீவ் கையில் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த ஆல்யா, ''எங்கள் குடும்பம் இளவரசி ஐலா மற்றும் புதிய குட்டி இளவரசன் அர்ஷ் ஆகியோரால் நிறைவாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் ஆல்யா ராஜா ராணி 2 தொடரில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.