தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

'ஆர்ஆர்ஆர்' படத்தில் தனது காட்சிகள் குறைப்பு: கோபத்தில் பதிவுகளை நீக்கிய ஆலியா

ஆர்ஆர்ஆர் படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் ஆர்ஆர்ஆர் படம் குறித்த தனது பதிவுகளை நீக்கியுள்ளார். 

Published On :

ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' கடந்த வெள்ளியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் 3 நாட்களில் ரூ.500 கோடி அளவுக்கு வசூலைப் பெற்றுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் கீரவாணியின் இசையும், செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்த நிலையில் நடிகை ஆலியா பட் படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். மேலும் இயக்குநர் ராஜமௌலியை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளாராம்.

நாடு முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அவருக்கு ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.