ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘அர்த்தம் வாய்ந்த ஜெய்பீம் கதாபாத்திரம்’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :2 நவம்பர் 2022, 11:57 am

DIN

‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்திற்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகளை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருப்பதாக இந்தப் படத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில் நடிகர் சூர்யா இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அர்த்தம் பொதிந்த இந்தத் திரைப்படத்தை எனக்கு வழங்கிய எனது சகோதரர் இயக்குநர் ஞானவேலுக்கு நன்றி. என்னுடைய திரைப்பயணத்தில் நீதியரசர் சந்துரு கதாபாத்திரம் எனக்கொரு அடையாளம். எனது ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.