துணிவு படத்திற்காக நடிகர் அஜித் தன் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: காதலிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? லவ் டுடே - திரைவிமர்சனம்
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.