முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

'இன்றுதான் எனக்கு தீபாவளி' - 'வாரிசு' பாடல் வெளியீடு குறித்து தமன் ட்வீட்!

விஜயின் வாரிசு பட பாடல் வெளியாவதையடுத்து, இன்றுதான் எனக்கு தீபாவளி என்று இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

விஜயின் வாரிசு பட பாடல் வெளியாவதையடுத்து, இன்றுதான் எனக்கு தீபாவளி என்று இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜயின் குரலில் இந்த பாடல் இன்று வெளியாக உள்ளது. 

இதையடுத்து இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, 'இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !!' என்று பதிவிட்டுள்ளார். 

வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று துபையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.