இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ரச்சிதாவிடம் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்: ‘ரெட் கார்டு’ கொடுக்கப்படுமா?

பிக் பாஸ் வீட்டில் நடிகை ரச்சிதாவை ஒருதலையாக காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:17 pm IST

பிக் பாஸ் வீட்டில் நடிகை ரச்சிதாவை ஒருதலையாக காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், நடன ஆசிரியரும் நடிகையுமான சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக யூடியூபர் ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார்.

இதற்கிடையே முதல் வாரத்திலேயே, ரச்சிதாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவரை பார்த்த பிறகுதான் சின்னத்திரை தொடர்களை பார்க்கிறேன் என்றும் ராபர்ட் மாஸ்டர் அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அனைத்து வாரங்களிலும் ரச்சிதா எந்த அணியில் இருந்தாலும், அந்த அணிக்கு ராபர்ட் மாஸ்டர் செல்லத் தவறவில்லை. ரச்சிதாவை மூக்குத்தி என்று புனைப்பெயர் வைத்து அழைத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் நிருபர் டாஸ்க்கை கமல் நடத்தினார். அதை பயன்படுத்தி ரச்சிதாவிடம் தனது காதலை ராபர்ட் மாஸ்டர் சொல்ல முயற்சித்தார். ஆனால், டாஸ்க்கை நிறுத்தினார் கமல்.

Story image

இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நிகழ்வில் ராபர்ட் மாஸ்டர் அடிக்கடி ரச்சிதா இருக்கும் கிச்சன் பகுதியிலேயே சுற்று வருவதாக தனலட்சுமி அனைவரின் மத்தியிலும் தெரிவித்தார்.

தனலட்சுமியின் கருத்தை தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டரை நான் ஒரு குழந்தையாகதான் பார்க்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் வெளியிலும் எனக்கு பலமுறை நடந்திருக்கிறது. இப்போது உள்ளேவும் இதுதான் நடக்கிறது என்று ஷிவினிடம் ரச்சிதா புலம்பினார்.

தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டருடன் உட்கார்ந்து பேசிய ரச்சிதா, என்னிடம் சகஜமாக பழகுங்கள் என்று தெரிவித்தார். ஆனால், ரச்சிதா பேசி முடித்தவுடன் ‘ஐ லவ் யூ’ என்று கூறிவிட்டு எல்லாரிடமும் சொல்வதை போல் சகஜமாகதான் கூறினேன் எனத் தெரிவிக்க ரச்சிதா கடுப்பானார்.

நேற்றைய நிகழ்வின்போது பொறுமையை இழந்த ரச்சிதா, நீங்கள் எனக்கு அண்ணா மாதிரி எனத் தெரிவித்தார். ஆனால், ரச்சிதாவின் கையை பிடித்த ராபர்ட் மாஸ்டர், மைனாவை அழைத்து இன்னொரு கையில் பிடித்துக் கொண்டார். ‘மைனா நான் உனக்கு அண்ணன் என்றால் எனது கையில் முத்தம் கொடுத்து அண்ணா என்று சொல்லு’ எனத் தெரிவிக்க மைனாவும் வலது கையில் முத்தம் கொடுத்து அண்ணா என்றார்.

Story image

ரச்சிதாவையும் முத்தம் கொடுத்து அண்ணா என்று சொல் என ராபர்ட் மாஸ்டர் கட்டாயப்படுத்த சங்கடத்தின் உச்சிக்கு சென்ற ரச்சிதா, நான் கொடுக்க மாட்டேன் எனது அண்ணாவை கையெடுத்து கும்புடுறேன் என்று தெரிவித்தார்.

இந்த காட்சிகளை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதுடன் டிவிட்டரில் ராபர்ட் மாஸ்டருக்கு எதிராக ‘ஹேஷ் டேக்’கையும் ட்ரெண்டு செய்தனர்.

இவ்வளவு நாள்களாக மெளனம் காத்த ரச்சிதா, நேற்றைய நிகழ்ச்சியில் வெளிப்படையாக தனது பதிலை ராபர்ட் மாஸ்டரிடம் தெரிவித்துவிட்ட நிலையில், இதன்பிறகாவது வந்த வேலையை பார்ப்பாரா ராபர்ட் மாஸ்டர்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.