”தயவுசெஞ்சு இதையெல்லாம் கேட்காதீங்க..”: கோரிக்கை வைத்த சிம்பு!

”தயவுசெஞ்சு இதையெல்லாம் கேட்காதீங்க..”: கோரிக்கை வைத்த சிம்பு!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-வது நாள் விழாவில் பங்குபெற்ற நடிகர் சிம்பு ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-வது நாள் விழாவில் பங்குபெற்ற நடிகர் சிம்பு ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியானது. 

முத்து(சிம்பு) என்கிற இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான பாதிப்பையே உருவாக்கினாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க:  விரைவில் ’அன்பே சிவம் - 2’?

மேலும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைப் படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 50 நாள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நடிகர் சிம்பு “இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கிறேன். சமீபத்தில் வெளியான விக்ரம், பொன்னியின் செல்வன், லவ் டுடே ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். வெந்து தணிந்தது காடு வெளியாவதற்கு முன் பயமாக இருந்தது. கமர்சியலாகவும் இல்லாமல் நாயக பிம்பத்தை பெரிதாக காட்டாமல் வித்தியாசமாக உருவான இப்படத்தை நீங்கள் வெற்றிப்படமாக மாற்றியது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியம் அளித்தது. இந்தப்படத்தில் முத்துவாகவே தெரிய வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டு நடித்தேன்” என்றபடி இருக்கைக்குத் திரும்பினார். 

பின் திடீரென மீண்டும் வந்து “ஒரு படத்தை திரையிட தயாரிப்பாளரும் இயக்குநரும் ரொம்ப சிரமப்படுகிறார்கள். நீங்கள் தினமும் அப்டேட் கேட்டால் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து எந்தப் படத்தின் அப்டேட்களையும் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்’ எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com