தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு... நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

காதலி சபா ஆசாத் உடன் ஹிருத்திக் ரோஷன்

Published On :

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட்டில் உச்சநடிகராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில்  ரீமேக் செய்யப்பட்ட ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை ஹிருந்திக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, காதலிக்கு ஹிருத்திக் மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மறுக்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.