கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பழைய ஆண் நண்பர்களுடன் இன்னமும் நட்பா? ராஷ்மிகா மந்தனா அதிரடி!

தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில்தான்   இருக்கிறேன் என்று அதிரடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:58 pm IST

தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில்தான்   இருக்கிறேன் என்று அதிரடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

முதன்முதலாக இவர் ஹிந்தியில் நடித்த குட்பை  திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டிய பேட்டியொன்றில் ஆண் நண்பர்கள் பற்றி  கருத்துத் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா, பழைய ஆண் நண்பர்களுடன் நல்ல உறவைப் பேணுவதாகத் தெரிவித்ததுடன், அவர்களுடைய இப்போதைய 'நட்பு'களையும் சங்கடமில்லாமல்தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story image

இவருடைய முதல் படமான கிரிக் பார்ட்டியில் (2016) சேர்ந்து நடித்தபோது, இணையாக நடித்த ரக்சித் ஷெட்டியுடன் நட்பில் இருந்தார் ராஷ்மிகா. சில ஆண்டுகளிலேயே கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து விட்டனர்.

பிறகு 2018-ல் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் உடன் நடித்த விஜய் தேவரகொண்டாவுடன் நல்ல நட்பில் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் பரவிக்கொண்டிருந்தாலும் இருவருமே இதை மறுத்து வருகின்றனர்.

Story image

ஹிந்தியில் அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோருடன் இவர் நடித்த குடும்பப் படமான குட்பை, வரும் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் ஹிந்தியில் ரன்வீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு ஆகிய படங்களிலும் ராஷ்மிக மந்தனா இணைந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.