ரஜினியின் உயரத்தோடும் பெருமையோடும் தன்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'சோலே’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.
அதன்பின், நாயகனாக அதிகப் படங்களில் நடித்தவர் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ’பின்க்’ , ’ஜூண்ட்’ போன்ற சமூக கருத்துகளை உள்ளடக்கிய படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் அமிதாப் பச்சன் கடந்த செவ்வாய்க்கிழமை தன் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையும் படிக்க: ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை - நடிகை திரிஷா பதில்

நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி
அன்று அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘அவர் லெஜண்ட். என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ இன்று 80-வது வயதிற்குள் நுழைகிறார். என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அமிதாப் பச்சன், ‘ரஜினி சார் நீங்கள் எனக்கு அதிகப்படியான கௌரவத்தைத் தருகிறீர்கள். உங்களின் உயரத்தோடும் பெருமையோடும் என்னை ஒப்பிட முடியாது. நீங்கள் என் சக நடிகர் மட்டுமல்ல அன்பான நண்பரும் கூட. உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.’ என நடிகர் ரஜினிக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
Rajni .. sir .. you give me too much credit .. I cannot compare myself to your immense presence stature and glory .. you have been not just a colleague,but a most dear friend.. your graciousness I do envelop with my gratitude and love https://t.co/514jv8qQsB
â Amitabh Bachchan (@SrBachchan) October 11, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



