’இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்...’: பிரபல நடிகர் ஆவேசம்

பாஜகவையும் தன்னையும் இணைத்துப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நடிகர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
’இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்...’: பிரபல நடிகர் ஆவேசம்
Published on
Updated on
1 min read

பாஜகவையும் தன்னையும் இணைத்துப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நடிகர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜவின் ‘பி’ டீமாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே  நடிகர் பவன் கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜவிடம் பணம் பெற்றுக்கொண்டு ’பி’ டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இனி இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். 

மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவசரமாக சந்தித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார்.

இதனால், ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com