'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும், கார்த்தியின் 'சர்தார்' படமும் வெளியாகியிருக்கின்றன.
'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.
இதே போல நடிகர் கார்த்தியின் படம் எப்பொழுதும் சுவாரசியமான கதையம்சத்துடன் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.

இந்த நிலையில் இருவரது படங்களும் வெற்றிபெற பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்.
இதையும் படிக்க | வெறும் உளவாளியா.. அசாதாரண உளவாளியா? - ’சர்தார்’ திரை விமர்சனம்
'பிரின்ஸ்' படம் தொடர்பாக அவரது வாழ்த்து செய்தியில், ''சிவகார்த்திகேயன், அனுதீப், சத்யராஜ் சார், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பிரின்ஸ் குழுவினரை மனதார பாராட்டுகிறேன். கலக்குங்க'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தியின் சர்தார் படம் தொடர்பாக சூர்யா பதிவிட்டுள்ளதாவது, ''நல்ல கதை பெரிய வெற்றியைப் பெறும். கார்த்தி, இயக்குநர் மித்ரன், ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சர்தார் படம் தொடர்பாக நல்ல விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எல்லா இடத்திலும் சர்தார் படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்துவருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









