தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து சொல்லியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
டாக்டர், டான் என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம், ஜதி ரத்னாலு என்ற வெற்றிப் படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கிய படம் என்பதால் பிரின்ஸ் மீதான மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இன்று தனது மகள் ஆராதனாவின் பிறந்த நாள் என்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, என்னுடைய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதனயைடுத்து ஆராதனாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.