வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ இன்று திரையரங்குகளில் வெளியானது.
இதையும் பார்க்க: வெந்து தணிந்தது காடு நாயகன் 'சிலம்பரசன்' - புகைப்படங்கள்
இதையும் படிக்க: ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயதாகிறதா?: அன்று முதல் இன்று வரை!
படத்தின் வெற்றி குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வருகின்றன.
இந்நிலையில், நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு திரைப்படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன். இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.