லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் திரைத்துறை தவிர மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்கம், வாகனப் பந்தயம் என பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. அதில் புதிதாக இணைந்துள்ளது பைக் பயணம்.
இதையும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்: புதிய அப்டேட்
அவ்வப்போது தன்னுடைய வாகனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் வெளியாகி வருகிறது. சமீபத்தில் லடாக் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் படங்களை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பைக் பயணத்தின் மத்தியில் சாலையோரம் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் உரையாடும் விடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | படம் பிளாக்பஸ்டர்: வெந்து தணிந்தது காடு பற்றி ஜெயமோகன்
தன்னை சந்திப்பதற்காக 3 நாள்களாக தேடி அலைந்த ரசிகர்களிடம் இயல்பாக “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என பேசிய விடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியான நடிகர் அஜித்குமாரின் விடியோவால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.