12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இன்று வெளியாகிறது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' முதல் பார்வை: தலைப்பு இதுவா?

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று (செப்டம்பர் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

இந்தப் படத்துக்கு துணிவு அல்லது துணிவே துணை எனப் பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது. இதனையடுத்து ஏகே 61 மற்றும் துணிவு போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகிவருகின்றன. 

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணி இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் ஏகே 61 படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வலிமை படத்தின் போது யுவனுக்கும் இயக்குநர் வினோத்துக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஏகே 61 படத்தின் வெளியீட்டுத் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.