நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்று வெளியாகிறது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' முதல் பார்வை: தலைப்பு இதுவா?

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 2:57 pm IST

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று (செப்டம்பர் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

இந்தப் படத்துக்கு துணிவு அல்லது துணிவே துணை எனப் பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது. இதனையடுத்து ஏகே 61 மற்றும் துணிவு போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகிவருகின்றன. 

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணி இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் ஏகே 61 படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வலிமை படத்தின் போது யுவனுக்கும் இயக்குநர் வினோத்துக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஏகே 61 படத்தின் வெளியீட்டுத் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.