பேரனுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ''நேற்று எனது பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கடவுள் எனக்கு இந்த ஆண்டு என்னுடைய வீரா பாப்பாவை பரிசாக அளித்து வாழ்த்தியுள்ளார். மேலும் இந்த கடவுளின் குழந்தை (ரஜினிகாந்த்) எப்பொழுதும் என் பின்னால் இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அஜித்குமார் நடிக்கும் படத்தின் பெயர் 'துணிவு'
சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் திருமணத்தின் போது அவருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







