நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன்(12). சமீபத்தில் சில யூடியூப் சேனல்கள் ஆராத்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தவறான தகவலைப் பரப்பினர்.
இதனைக் கண்ட ஆராத்யா தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பகிர்ந்த யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஆராத்யா பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.