தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷால்!
ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமா படக்குழு அறிவித்திருந்தது.
மேலும், நாகர்ஜூனா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நாகர்ஜூனா நடிப்பதைப் படக்குழு உறுதிசெய்துள்ளது.
இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.