வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
இதையும் படிக்க: ’சூர்யா 42’ ஹிந்தி உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?
சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
இந்நிலையில், சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் மீண்டும் படப்பிடிப்பு ஒத்திவைக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.