25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு! 

நடிகர் சந்தானத்தின் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:22 pm IST

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவரது கிக் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

ஏகே 62 படத்திலும் அரண்மனை 4 படத்திலும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. சந்தானத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுந்தர் சி, விஜய்சேதுபதி பங்கேற்றனர். இதனால் அரண்மனை 4 உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் புதிய படம் ஒன்றின் அப்டேட் வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி எழுதி இயக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடிக்க உள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் பகிர்ந்துள்ளார்.

உத்தமராசா திரைப்படம் 1993இல் வெளியானது. இதில் பிரபு, குஷ்பு, ரோஜா, கவுண்டமனி, செந்தில் ஆகியோர் நடித்திருந்த படம். கவுண்டமனியின் பிரபலமான வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர். இந்த தலைப்பு இணையத்தில் வரலாகி வருகிறது. 

Story image

டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி தயாரிக்க சீன் ரோல்டன் இசையமைக்கிறார். மாநகரம் படத்திற்கு வசனம் எழுதியவரும் டிக்கிலோனா படத்தின் இயக்குநருமான கார்த்திக் யோகி இந்தப் படத்தினை இயக்குகிறார். 

தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.