நடிகர் துருவ் விக்ரம் ’டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் துவங்கினாலும் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கணேஷ் பாபு கூட்டணியில் நடிப்பார்.
இதையும் படிக்க: மாமன்னன் வசூல் இவ்வளவா?
இந்நிலையில், துருவ் விக்ரம் - கணேஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.