செய்திகள்
விரைவில் மரகத நாணயம் - 2
மரகத நாணயம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்.
நடிகர் ஆதி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவான இது வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதில் நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்குப் பின் இயக்குநர் சரவன் ஹிப்ஹாப் ஆதியை வைத்து ‘வீரன்’ படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற அப்படம் தோல்வியடைந்தது.
இதையும் படிக்க: கங்குவா கிளிம்ஸ் சாதனை!
இந்நிலையில், மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதை இயக்குநர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.