த்ரிஷ்யம் 3: மலையாளம், ஹிந்தி ஒரே நேரத்தில் படப்பிடிப்பு? 

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான மிகவும் புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தின் 3வது பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
த்ரிஷ்யம் 3: மலையாளம், ஹிந்தி ஒரே நேரத்தில் படப்பிடிப்பு? 
Published on
Updated on
1 min read

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

அப்படத்தின் தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் - ஆண்டனி பெரும்பாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘த்ரிஷ்யம் 3’ உறுதி எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை ஜார்ஜ் குட்டி(மோகன்லால்) மகள் அடித்துக் கொல்கிறாள். இந்தக் கொலையை மறைக்க ஜார்ஜ் தன் குடும்பத்தினருடம் எதிர்கொள்ளும் சவால்கள் எதிர்பாராத திருப்பங்கள் என த்ரிஷ்யம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் அதன் இறுதி பாகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் மலையாளம், ஹிந்தியில் ஒரே நேரத்தில் 2024இல் படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் த்ரில்லர் படங்களில் சஸ்பன்ஸ் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com