தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 5 நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியது:
“தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு தேதி கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்தும் 5 நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்!
மீண்டும் பழைய நிலையை தொடர்ந்தால், பொதுவெளியில் பெயர்கள் வெளியிடப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் படம் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 பேர்தான் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.