

நடிகர் ராம் சரண் - உபசனா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘க்லின் காரா கொனிடலா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் எண்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், ஆஸ்கர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்தது. முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபசனாவுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமானது. கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாத இவர்கள், 2020 டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்தனர்.
இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராம் சரண் - உபசனா தம்பதிக்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, குழந்தைக்கு பெயர் சூட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் அந்த குழந்தைக்கு ‘க்லின் காரா கொனிடலா’ என பெயர் சூட்டியுள்ளனர்.
க்லின் காரா என்றால் இயற்கையின் உருவத்தை பிரதிபலிப்பது என்பது பொருள் என நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே ராம் சரணின் குழந்தைக்கு முகேஷ் அம்பானி தங்கத் தொட்டில் ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தங்கத் தொட்டிலின் விலை மட்டும் சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.