எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’.
முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது.
ஏ.ஆா்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடா்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இதையும் படிக்க: ஃபர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் ஆண்ட்ரியா பாடிய பாடல்!
இந்நிலையில், வெளியான 4 நாளில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
The Chola legacy grows!#PS2 conquers the world with 200+ crores!
Book your tickets now!