திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் வருகிற டிச.15 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நயன்தாராவின் 75-வது படம்: வெளியானது 'அன்னபூரணி' டிரைலர்
இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகக் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா பிரபு, அவரது அத்தை மகன் குணாலைத் திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.