நடிகர் விஜய் மீது வருத்தம்: சேரன்

இயக்குநரும் நடிகருமான சேரன், நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் மீது வருத்தம்: சேரன்

இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் உருவான ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

சாதியப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில், “ஆட்டோகிராஃப் படத்தின் கதையை நடிகர் விஜய்யிடம் மூன்று மணிநேரம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், என் படப்பிடிப்பு தேதிகள் காரணமாக அவருடன் இணைய முடியவில்லை. இப்போது வரை இதனால்  ஆத்மார்த்தமான வருத்தம் உண்டு. அதன்பின்பு, விஜய்யை சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. ஒருவேளை, ஆட்டோகிராபில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். இன்றைய விஜய் தொழிலில் மிக ஈடுபாட்டுடன் இருக்கிறார். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து இயக்குவேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com