
நடிகர் சிம்பு தன் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
சிம்புவின் ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதனால், சென்னையில் தன் ரசிகர்களைச் சந்தித்த சிம்பு அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
சிம்பு அடுத்ததாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.