பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் எமா்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார்.
முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் கங்கனா ரணாவத்.
இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜீவி பிரகாஷ் வாசிப்பதை கண்டு நடிகையும் இயக்குநருமான கங்கனா, “அசகாய திறமையுள்ள ஜீவி பிரகாஷ் இசையமைப்பதை ஒரு ரசிகையாக ரசித்து பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.