
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஹரி இயக்குகிறார். இது ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சிங்கம், வேல் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் விஷால் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது 3வது படமாகும்.
இந்தப் படம் மிகப்பெரிய சரவெடியாக இருக்குமென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.