கேப்டன் மில்லர் படத்தை நிறுத்தக்கோரி ஆட்சியர் உத்தரவு! 

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை உடனே நிறுத்தக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
கேப்டன் மில்லர் படத்தை நிறுத்தக்கோரி ஆட்சியர் உத்தரவு! 

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை உடனே நிறுத்தக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் படத்திற்கான கூடுதல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதாகவும், படப்பிடிப்பு நடத்த மாவட்டத்தின் எந்த துறையிடமும் படக்குழு அனுமதி பெறவில்லை என்பதால் படத்தை உடனே நிறுத்தக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com