தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தொடங்கிய திவ்யா துரைசாமி குற்றம் குற்றமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார். சில படங்களில் துணைக்கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 295ஆயிரம் ஃபாலேயர்ஸ் இருக்கிறார்கள். இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் அவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது புடவை அணிந்த புதிய புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார்.