மும்பைக்குக் குடியேறினேனா? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

நடிகர் சூர்யா மும்பைக்குக் குடியேறியதாக வெளியான தகவல்களுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மும்பைக்குக் குடியேறினேனா? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

நடிகர் சூர்யா, சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், அவர் சுதா கொங்காரா படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் சூர்யா தன் ரசிகர்களைச் சென்னையில் சந்தித்தார். அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ஏன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினீர்கள்?’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு சூர்யா, ‘நான் மும்பைக்கு நிரந்தரமாக குடியேறவில்லை. என் மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரும் மும்பையில் படிப்பதால் அடிக்கடி அவர்களைச் சந்திப்பதற்காகவே அங்கு செல்கிறேன். நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன்’ எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com