லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிக்க: திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!
இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: தந்தையை கண்டடைதல்: அனிமல் - திரைவிமர்சனம்!
லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய் குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ எனப் பெயரிட்டுள்ளனர். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை!
நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் குமார், “ஆங்கில படமான ஃபைட் கிளப் படத்துக்கு இந்தப் படத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஒரு மரியாதை கொடுக்கும் வண்ணமாக அந்தப் பெயரினை வைத்துள்ளோம். லோகேஷ் எனக்கு நெடுநாள் நண்பன். அவர் குறித்து பேசிக்கொண்டே போகலாம்.
இதையும் படிக்க: சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி: வைரலாகும் போஸ்டர்!

இந்தப் படத்தனை லோகேஷ் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இயக்குநர் அப்பாஸ் குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. (கண்கள் கலங்கினார். சிறிது இடைவெளி விட்டு) எனது துணை இயக்குநர்கள் கூறினார்கள் ‘சீரியசாக பேசாதீர்கள். யாருக்கும் அது பிடிப்பதில்லை’ என்றார்கள். ஆனால் இந்தப் படம் எங்களுக்கு தொழில் மட்டுமே அல்ல. அவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளோம். இயக்குநர் அப்பாஸ்ஸுக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது. அவ்வளவு சினிமா பித்தன். மணிரத்னம் ரசிகன். படம் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன்” எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் காதல் தம்பதி சடலங்கள்: போலீசார் விசாரணை






