வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
தற்போது, 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வரும் காரப்பாக்கத்திலும் நீர் சூழ்ந்திருந்தது. இதனை, எக்ஸ் தளத்தில் தெரிவித்தவர் தனக்கு உதவும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
தொடர்ந்து, அவர் இருக்கும் வீட்டை அடைந்த தமிழக தீயணைப்புப் படையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரின் மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டனர். எதிர்பாராத விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதே பகுதியில் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டவர்கள், பத்திரமாக அமீர் கானை மீட்டு விஷ்ணு விஷாலுடன் அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்டபின் அமீர்கானும் சென்னையில் இருந்தார் என்கிற செய்தி வேகமாகப் பரவத் துவங்கியது. இதனையடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் தன் எக்ஸ் தளத்தில், “ நாங்கள் இருந்த நிலையை பொதுவான நண்பர் மூலம் அறிந்துகொண்ட அஜித் சார், எங்கள் வில்லாவைச் சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். எப்போதும் உதவும் மனப்பான்மையைக் கொண்டவர். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டதுடன் அஜித்குமார் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இப்படம், உடனடியாக இந்திய அளவில் டிரெண்டிங் ஆனதுடன் வைரலாகியது. பலரும் அஜித் குமாரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
After gettting to know our situation through a common friend,
â VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023
The ever helpful Ajith Sir came to check in on us and helped with travel arrangements for our villa community membersâ¦Love you Ajith Sir! https://t.co/GaAHgTOuAX pic.twitter.com/j8Tt02ynl2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!

ஆடி பௌர்ணமி; பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கதவுகள் திறப்பு!

ரசிகர்கள் பித்துப் பிடித்ததுபோல கொண்டாடுகிறார்கள்... வெற்றி விழாவில் கௌரி ப்ரியா நெகிழ்ச்சி!

வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேஷ்டி-சட்டையில் வரும் முதல்வர் விஜய்! காரணம் என்ன?
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament


